நிர்ஜலா ஏகாதசி; உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :556 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத நிர்ஜலா ஏகாதசி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி -பூதேவி தாயாருடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிதார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.