உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி பௌர்ணமி; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி பௌர்ணமி; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை;  என். எச். ரோடு - டவுன்ஹால் ரோடு சந்திப்பில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஆனி மாதம் பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரம் மற்றும் நீல வண்ண காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !