உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு

ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு

கோவை; பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலைக்கல்லூரி அருகே உள்ள ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 


இக்கோயிலில் ஆனி மாத ஆஷாட நவராத்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் பச்சை வண்ணக் காப்புடன் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !