உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு

ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு

கோவை; பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலைக்கல்லூரி அருகே இருக்கும் ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த ஆஷாட நவராத்திரி விழா நிறைவடைந்தது. நிறைவு நாளை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் மாதுளை முத்து அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு வாராகி அம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !