விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED :443 days ago
விருத்தாசலம்; விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், 42வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 21ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. 26ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று 11ம் நாள் நிகழ்வாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று (2ம் தேதி) காலை மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை மஞ்சள் நீர் உற்சவம், மணிமுக்தாற்றில் இருந்து கஞ்சிக்கலயம் சுமந்து வரும் நிகழ்வு நடக்கிறது. 4ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.