அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவம்; சுவாமி வீதி உலா
ADDED :529 days ago
திருவண்ணாமலை; அருணாச்சலேஸ்வரர் கோவில் சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் கார்த்திகை தீபம் ஏழாம் நாள் தேரோட்ட விழாவில் மாத வீதி வரும் மகா ரதம் என்று அழைக்கப்படும் பெரிய தேரை சீரமைக்கும் பணிக்காக நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.