/
கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோயிலில் சிரவண உபகர்மா வைபவம்; கிருஷ்ண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்
திருப்பதி கோயிலில் சிரவண உபகர்மா வைபவம்; கிருஷ்ண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :572 days ago
திருமலை; திருப்பதியில் சிராவண பௌர்ணமியை முன்னிட்டு, திருமலை கோவிலில் சிரவண உபகர்மா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி, ஸ்ரீ வராஹ சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு புதிய யக்ஞோபவீதம் படைக்கப்பட்டு ஆஸ்தானம் செய்யப்பட்டது. சடங்கு முடிந்து ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் திருமலை கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.