உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்துடன், விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !