திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு கோவர்த்தனகிரிதரன் அலங்காரம்
ADDED :477 days ago
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் உற்சவர் பெருமாள் அன்னகூட உற்சவத்தில் கோவர்த்தனகிரிதரன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாள் புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். புரட்டாசி 3வது சனிக்கிழமையான இன்று காலை 11:00 மணிக்கு அன்னக்கூட உற்சவம் நடந்தது. உற்சவர் பெருமாள் கோவர்த்தனகிரிதரனாக ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.