உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம்

ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம்

 திருப்பூர்; திருப்பூர் மாவட்ட, ஸ்ரீசத்ய சாய்பாபா சேவை அமைப்பு சார்பில், ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கடந்த 19 ம் தேதி துவங்கியது. பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில், 19ம் தேதி நாம சங்கீர்த்தனம், சாய் மந்திரில் உழவாரப்பணி ஆகியன நடந்தது. திருவிளக்கு பூஜையும், பாலவிகாஸ் ஆசிரியர்கள் மற்றும் மகளிர் பங்கேற்ற சிறப்பு வழிபாடும் நடந்தது. இளைஞர்கள் பங்கேற்ற சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு ஆகியன நடந்தது;  லிங்கராஜன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோர் பேசினர். தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், நகர சங்கீர்த்தனம்; கணபதி ேஹாமம், பிரசாந்தி கொடியேற்றம் மற்றும் சாய் பஜன் நடைபெறும். காலை 11:00 மணி முதல் சிறப்பு நாராயண சேவையும், மாலை 4:45 மணிக்கு 1008 சகஸ்ர நாம பாராயணம்; ஸ்வாமி அழைப்பு, சாய் பஜன் மற்றும் சொற்பொழிவும், அதையடுத்து ஊஞ்சல் உற்சவம், மகா மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. இன்று (24ம் தேதி) காலை 9:00 மணிக்கு அகண்ட நாம பஜன் மற்றும் ரத்த தான முகாம் ஆகியன நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !