காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த மருதூர் ஜெய மங்கள ஆஞ்சநேயர்
ADDED :320 days ago
கோவை; காரமடை அருகே உள்ள மருதூர் ஜெய மங்கள ஆஞ்சநேயர் கோவிலில் மாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மாதம் மும்மாரி பெய்து விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழித்து வளர்ந்திட வேண்டியும் அனுமனுக்கு 27 வகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.