விழுப்புரம் பஞ்சமாதேவி பசுபதிஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்
ADDED :166 days ago
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவியில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷம் விழா இன்று நடந்தது. கோவிலில் மாலை மூலவர் பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பசுபதீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.