இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோவிலில் சோமவார அபிஷேகம்
ADDED :415 days ago
திருவண்ணாமலை; சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோவிலில், ஆனி மாத சோமவார தினத்தை முன்னிட்டு மூலவருக்கு பாலபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோவிலில், ஆனி மாத சோமவார தினம் மற்றும் 26ம் ஆண்டுவிழா முன்னிட்டு மூலவருக்கு பால்பிஷேகம் நடந்தது. 108 பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலம் வந்து சுவாமிக்கு பால்பிஷேகம் செய்து தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.