தேய்பிறை அஷ்டமி; காலபைரவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம்
ADDED :177 days ago
மேலூர்; தும்பை பட்டி கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கரநாராயணர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் பாராயணம் செய்தனர்.பிறகு பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.