அனுப்பர்பாளையம்; திருப்பூர், செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ சுடலைமகாராஜா, ஸ்ரீ முண்ட சுவாமி, ஸ்ரீ ராஜ காளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பிரம்மசக்தி, ஆகிய சுவாமிகளின் 19 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 6 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 8 ம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். சாமிக்களுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று 9 ம் தேதி காலை 7:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வருதல், மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை, கணியான் அழைப்பு, இரவு 8:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல். இரவு 9:00 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, இரவு 11:00 மணிக்கு மாசான சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லுதல், சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது.