மலைக்கோவிலில் ஆருத்ரா சிறப்பு பூஜை
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜை நாளை (டிச., 28) நடக்கிறது.காரிமங்கலம் ஸ்ரீஅபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாளை காலை, 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை பவுர்ணமி கிரிவல பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
* காவேரிப்பட்டணம் பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீவேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், அதிகாலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு திருவாதரை களி பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் பவுர்ணமி கிரிவல பூஜை நடக்கிறதுஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.