திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி யாகசாலை பூஜை
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அக். 22முதல் விசாக கொறடு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனித்தீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது. அக். 27 காலையில் சண்முகருக்கு தங்க குடத்திலுள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக். 26ல் கோயில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக்.27 மாலை 6:00 மணிக்கு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரச்சம்ஹார லீலையும், அக். 28 காலையில் சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரிவீதி, ரதவீதிகளில் தேரேட்டம் நடக்கிறது. தேரோட்டம் முடிந்தபின்பு கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் விரதத்தை முடித்து வீடுகளுக்கு திரும்புவர். அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல புண்ணியாகவாசனமாகி, தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.