பாலக்காடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் துவக்கம்
ADDED :5 minutes ago
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.
கேரள மாநிலம், பாலக்காடு, பிராயிரி கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஆறாட்டு மகோத்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு நேற்று மாலை கொடியேறியது. மாலை 7:00 மணிக்கு தந்திரி பிரஹ்மஸ்ரீ அணிமங்கலம் வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில், கொடியேற்றம் நடந்தது. நாளை (5ம் தேதி) அம்மனுக்கு விளக்கு பூஜை நடக்கிறது. உற்சவ நாளான, 10ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, கலச பூஜை, அஷ்டபதி, மஞ்சள் நீராட்டு, பிரஹ்மகலசாபிஷேகம், ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி, அன்னதானம், அம்மன் எழுந்தருளும் வைபவம், நிர்மால்லிய தரிசனம், சந்தன காப்பு, சுற்றுவிளக்கு ஏற்றுதல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.