சாரல் மலையில் நடந்து வந்த பழநி பாதயாத்திரை பக்தர்கள்
ADDED :33 minutes ago
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி வருகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மழைச்சாரல் நாள் முழுவதும் இருந்தது பாதயாத்திரை பக்தர்கள் சாலைகளில் ஆட்டம் பாட்டத்துடன் வலையில் நடந்து வந்தனர். மேலும் சில இடங்களில் பாதயாத்திரை சாலைகள் சேதமடைந்து உள்ளதால். இதனால் பக்தர்கள் சாலையில் இறங்கி நடக்கும் நிலை ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாக வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. பாதயாத்திரை பாதையில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.