உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னியாண்டவர் கோவில் தைப்பூச விழா: மஞ்சள் நீராட்டு உற்சவம்

சென்னியாண்டவர் கோவில் தைப்பூச விழா: மஞ்சள் நீராட்டு உற்சவம்

கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று நடந்தது.


கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, தைப்பூச தேரோட்ட விழா, கடந்த, ஜன., 23 ம்தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 24 ம்தேதி கொடியேற்றம் நடந்தது. 31ம்தேதி வரை தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 31 ம்தேதி மாலை வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 1 ம்தேதி தைப்பூசத்தன்று, மகா அபிஷேகம் முடிந்து, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை அபிஷேகமும், மகா தரிசன பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, கொடி இறக்கி, மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !