உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்

சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா துவக்கம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட, சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நேற்று காலை 10:50 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் தலைமையில் கொடிமரத்திற்கு வழிபாடு நடத்தப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்கள் பங்கேற்றனர். 10 நாள் விழாவாக தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். பிப். 25ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப். 26ம் தேதி கழுவன் திருவிழா நடக்கிறது. மார்ச் 1 ல் தேரோட்டம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்த தண்டாயுதபாணி வீதி உலா புறப்பட்டு அரளிப்பாறை கோயில் வந்தார். அங்கு இரவு 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !