உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த 15ம் தேதி, மகா சிவராத்திரி விரதத்துடன் துவங்கியது.


கடந்த 16ம் தேதி, சர்க்கார்பதி காட்டிலிருந்து, கொடிக்கம்பம் எடுத்து வந்து பூஜை செய்து நடப்பட்டது. நேற்று, (22ம் தேதி) அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 26ம் தேதி, கண்ணபிரான்துாது, சுவாமி புறப்பாடு, குண்டத்துக்காட்டில் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது.


மார்ச் 3ம் தேதி, அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு மற்றும் ஊர்வலமும், 4ம் தேதி, குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, மார்ச் 5ம் தேதி, குண்டம் இறங்குதல் மற்றும் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 6ம் தேதி, திருத்தேர் நிலை நிறுத்தல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகமும், 7ம் தேதி, மஞ்சள் நீராடுதல் மற்றும் போர் மன்னன் காவல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !