சிவ சிந்தனை நடைபயணம்
ADDED :48 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ சிந்தனை நடைபயணம் நேற்று நடந்தது.
உலக மக்கள் இன்புற்று வாழ வேண்டி, புதுச்சேரி காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து காலை 7:00 மணிக்கு துவங்கிய சிவசிந்தனை நடைபயணம், நேரு வீதி, அண்ணா சாலை, 100 அடி சாலை, ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம் வழியாக வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் காலை 11:00 மணிக் கு முடிவடைந்தது.
இதில், ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திருக்காமீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.