உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

சோலைமலை கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

அழகர்கோவில்: அழகர்மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதையொட்டி யாகசாலை மண்டபம் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது.


இக்கோயிலில் 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது.12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடத்த முடிவு செய்து, கடந்தாண்டு நவம்பரில் பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கின.


பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுசஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி உற்ஸவ மூர்த்திக்கு முன், முகூர்த்தக்கால் மரம் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.


மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மூலவர் சன்னதியை வலம் வந்து, ராஜகோபுரம் வழியாக யாக சாலை மண்டபம் அமையவுள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. நவதானியம், பால், மலர்கள் துாவி, அரோகரா கோஷத்துடன் முகூர்த்தக்கால் நட்டு, தீபாராதனை காண்பித்தனர். கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் பாலமுருகன்உட்பட பலர் பங்கேற்றனர்.


கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘விரைவில் திருப்பணிகள் முடிந்து யாகசாலை பூஜைகள் நடத்தி, கும்பாபிஷேகம் நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’’ என்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !