சென்ன கேசவ பெருமாள் கோயிலில் பங்குனி கொடியேற்றம்
ADDED :15 hours ago
காரியாபட்டி: மல்லாங்கிணரில் சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடி வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளம் முழங்க கொடியேற்றி, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் காலை, மாலை வேளைகளில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், குதிரை வாகனம், சேஷவாகனம் புறப்பாடுகள் நடக்கிறது. காசி யாத்திரை, மகா ரத உற்ஸவம், கள்ளழகர் அலங்காரம், மோகினி அவதாரம் சிறப்பாக நடைபெறும். திருக்கல்யாண உற்ஸவம், தீர்த்த வாரி, புஷ்ப பல்லக்கு நடைபெறும்.