உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடுகநாத சுவாமி கோவிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை!

வடுகநாத சுவாமி கோவிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை!

பல்லடம்; பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.


பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, மலையம்பாளையம் கிராமத்தில் வடுகநாதசுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நூற்றாண்டு பழமையான இக்கோவிலில், காலபைரவர் மூலவராக அருள்பாளிக்கிறார். கடந்த, 17 ஆண்டுகளுக்குப் பின், கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் ஏப்., 23 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்வில், கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் அருள் தரும் பைரவர் கல்வி சமய சமூக அறக்கட்டளையினர், இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். விநாயகர் மற்றும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !