உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதா ராமர் திருகல்யாணம்

காளஹஸ்தி பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதா ராமர் திருகல்யாணம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதா ராமரின் திருகல்யாணம்மிகவும்  கோலாகலமாகவும் நடைபெற்றது.


ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான துணை கோயிலான  நேரு வீதியில் அமைந்துள்ள ராம மந்திரத்தில்  ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன . பின்னர், நேரு வீதியில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்தில் சீதை மற்றும் ராமரின் உற்சவ மூர்த்திகளை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க, வேதப் பண்டிதர்கள்  மற்றும் தலைமை அர்ச்சகர்களின் தலைமையில் ஸ்ரீ சீதா ராமரின் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 


ஜானகி ராமரின் திருமணத்தைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயில் செயல் அலுவலர்  வெங்கடேசுலு மற்றும் அதிகாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீதாராமர் திருக்கல்யாண உற்சவத்திற்காக (சீர்வரிசை பொருட்கள்) பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோயில் வளாகத்தில் இருந்து தலை மீது சுமந்து ஊர்வலமாக பட்டாபிராமர் கோயில் அர்ச்சகரிடம் வழங்கினர். அவற்றை அணிவித்து‌   சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி அம்மையார்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்குப் பிரசாதங்கள்  வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !