பழநி சண்முக நதியில் அமலைச் செடிகள்: பக்தர்கள் அவதி
ADDED :1 hours ago
பழநி: பழநி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் புனித நீர்நிலையான சண்முக நதியில் பக்தர்கள் பயன்படுத்தும் இடத்தில் அமuலச்செடிகளால் மாசடைந்து உள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். பழநிக்கு பங்குனி உத்தரவை விழாவை பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் சண்முக நதி பகுதிகளில் குளித்து நீராடிய பின் பழநி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்வர். ஆனால் புனித நதியான சண்முக நதியில் சாக்கடை நீர் கலந்து அமலைச் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. பக்தர்கள் இங்கு குளிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் பக்தர்கள் கவலையடைந்துள்ள னர்.