கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வ விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில் 26ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 17ம் ஆண்டு திருத்தேர் விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் செய்திருந்தனர். காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபாரதனையுடன், அம்மன் தேரில் எழுந்தருளினார். 9:30 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் விஜய் மகேஷ் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது, பக்தர்கள் நாணயம், காய்கறி, பழங்களை வீசியெறிந்து நேர்த்திகடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு 7 நாட்களாக தொடர் அன்னதானம் நடந்தது.