உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கோதண்டராமர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருவாலங்காடு; நெடும்பரம் கோதண்டராமர் திருக்கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று கோலாகலமாக நடந்தது.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராமர் சுவாமி திருக்கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாதபடி, மூலவர் சன்னிதியில், ராமர், சீதைக்கு உபதேசம் செய்யும் வகையில், வால்மீகி முனிவர் அமைந்திருக்கிறார். ராமர், வில் இன்றி இருப்பது சிறப்பு. இக்கோவிலில், 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 20 ஆண்டுகள் கடந்து விட்டதால், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக கோவில் குளம், கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. திருப்பணிகள் முடிந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த 27ம் தேதி காலை 8:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன் விழா தொடங்கியது.


தொடர்ந்து யாகசாலை, கடஸ்தாபனம் செய்யப்பட்டது. நேற்று, சதுர்ஷ ஆராதனம், மஹா ஷாந்தி ஹோமம் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 8:30 மணிக்கு கலச புறப்பாடும், உற்சவர் ஆலய உலாவும் நடந்தது. பின், 8:40 மணிக்கு, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !