கள்ளிப்பாளையம் மருதாசல மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2 days ago
கோவில்பாளையம்: கள்ளிப்பாளையம், மருதாசலமூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கள்ளிப்பாளையத்தில், மருதாசல மூர்த்தி கோவிலில், புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் விமானம் ஆகியவை கட்டப்பட்டன. பரிவார மூர்த்திகளாக, விநாயகர், பாலமுருகர், செந்தில் ஆண்டவர், முத்துக்குமாரசுவாமி, இடும்பன், மயில்வாகனம், கன்னிமார் சாமிகள் நிறுவப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. நேற்று மூல திருமேனிகளுக்கும், கோபுர கலசங்களுக்கும், திருமஞ்சனம் நடந்தது. மதியம் விமான கலசங்கள் நிறுவப்பட்டன. இரவு ஜமாப் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 8:20 மணிக்கு விமானம், மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கினார். காவடியாட்டம் மற்றும் ஜமாப் ஆட்டம் நடந்தது.