பந்தலூர் விஷ்ணு கோவிலில் சுதர்ஷன ஹோமம்
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில் நடந்த சுகிர்த ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில் நேற்று மஹா சுகிர்த ஹோமம் நடந்தது. மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கோவில் மேல்சாந்தி ஸ்ரீ சுதீஷ் பாலேரி தலைமையில் விளக்கு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நடிகை மாயாவிஸ்வநாத், கோவில் மேலாளர் சந்தியா, கன்வினர் புஷ்கரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
ஹோம பூஜைகளை துவக்கி மேல் சாந்தி பேசுகையில், சுகிர்த ஹோமம் என்பதை செல்வம், நல்வாழ்வு மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்காக செய்யப்படும், ஒரு சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும். மனத் தூய்மை, குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமூகத்தில் நற்பெயர் ஆகியவற்றை தரும். செல்வ வளம், லட்சுமி கடாட்சம், மன அமைதியை பெறக்கூடிய இந்த, ஹோமத்தில் பங்கேற்பது அனைவருக்கும் நன்மை தரும் என்றார். தொடர்ந்து காயத்ரி மந்திரம் பாராணயம் செய்யப்பட்டு, ஹோமம் நடத்தப்பட்டது. ஆன்மீக சொற்பொழிவாளர் வியாசன்அமனகரா இறை வழிபாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பூஜையும் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா, வயநாடு பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, பயன் பெற்றனர். ஏற்பாடுகளை மேலாளர் சந்தியா மேற்பார்வையில் கமிட்டி தலைவர் வினோத் பெருவா தலைமையில்,கோவில் கமிட்டி நிர்வாகிகள் பிரபாகரன், ரதீஷ், உன்னிகிருஷ்ணன், சதீஷ், ராஜேஷ் உள்ளிட்ட குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.