உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக யாக பூஜை துவக்கம்

சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக யாக பூஜை துவக்கம்

கோவை; சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள்  என்று அழைக்கப்படும் ஞீ த்ரிவிக்ரம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக நேற்று வியாழக்கிழமை காலை மகா சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து சங்கல்பம் ஆச்சரிய வர்ணம்   ஸ்ரீ வாசுதேவ புண்யாக வசனம்  வாஸ்து ஹோமம் வேத திவ்ய பிரபந்த தொடக்கம் ஆகியன நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் ஸ்ரீ வாசுதேவ புண்யாக வசனம் நடந்தது. காலை 10 மணியளவில் யாகசாலை பிரவேசம் முதலாம் கால யாக சாலை பூஜை ஆகியன நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதர் உற்சவமூர்த்தி ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு 81 கலச திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது மாலை ஆறு மணி அளவில் இரண்டாம் கால பூஜை ஹோமங்கள் நடைபெறுகிறது. மூன்றாம் நாள் சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயார் கோபுரங்கள் ராஜகோபுரத்துக்கு திருமஞ்சனம் மாலை 6 மணி அளவில் நான்காம் கால  பூஜை இரவு 8 மணியளவில் பூர்ணாகதி நடைபெறும். கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில்வில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து காலை 09-30மணியளவில் பக்தர்கள் தரிசனம்  இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் கொள்ளவேண்டும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !