உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  விருத்தாசலம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்; ஏராளமானோர் தரிசனம்

 விருத்தாசலம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்; ஏராளமானோர் தரிசனம்

விருத்தாசலம்: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (7ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி மாலை 6:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் அர்சுனன் – திரவுபதி அம்மன்னுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாாடுகளை சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !