வெஞ்சமடை வாஞ்சிநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
உடுமலை: வெஞ்சமடை ஸ்ரீ சித்தி மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வர பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
உடுமலை வெஞ்சமடையில், ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வர பெருமான் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலில் ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாளுக்கு கோபுரத்துடன் கூடிய தனிக்கோவில், அர்த்த மண்டபம், உற்சவர் சன்னதி, மகாவிஷ்ணு கோவில்கள், சன்னதிகள் அமைக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா ஜூன் 29ல், துவங்கியது. முதற்கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, ஜூலை 1ல், இரண்டாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாக சாலை பூஜையும், காலை, 9:15 மணிக்கு ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வர பெருமான் கோபுர விமானம் மற்றும் சிவாலய பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:15 மணிக்கு மேல், ஸ்ரீ பாலமுருக பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமானம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இன்று மாலை, 4:00 மணிக்கு சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.