உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரி ஜெகன்நாத் ரத யாத்திரை; 12,000 காவலர்கள் மற்றும் ட்ரோன்களுடன் பாதுகாப்பு திட்டம்

பூரி ஜெகன்நாத் ரத யாத்திரை; 12,000 காவலர்கள் மற்றும் ட்ரோன்களுடன் பாதுகாப்பு திட்டம்

புவனேஸ்வர்: பூரி ரத யாத்திரை: 12,000 காவலர்கள் மற்றும் ட்ரோன்களுடன் ஒடிசா அரசு பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்துகிறது.


ஜூலை 16 அன்று பூரியில் நடைபெறவுள்ள வருடாந்திர ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, நிலம், நீர் மற்றும் வான்வழி கண்காணிப்பு உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்புத் திட்டத்தை ஒடிசா காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த பாதுகாப்புத் திட்டம் முக்கியமாக தரைப்பகுதியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மை மற்றும் அவசரக்கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது; அதேவேளையில், வான்வழிப் பாதுகாப்பைக் கண்காணிக்க ட்ரோன்கள் மற்றும் ட்ரோன்-எதிர்ப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கடற்பகுதியில் இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் ஒடிசா காவல் துறையின் கடல்சார் பிரிவு ஆகியவற்றின் கூட்டு ரோந்து முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது; மேலும் கப்பல்களில் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் பணியமர்த்தப்படவுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஒடிசா காவல்துறையின் இந்த பாதுகாப்புத் திட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 16ம் தேதி துவங்கி ஒன்பது நாள் நடக்கும் ரத யாத்திரை விழாவிற்காக மொத்தம் 12,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !