உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் பெருமாள் கோவிலில் இன்றும், நாளையும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை

காஞ்சி வரதராஜ பெருமாள் பெருமாள் கோவிலில் இன்றும், நாளையும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை

காஞ்சிபுரம்; வரதராஜ பெருமாள் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகளுக்கு சீரமைப்பு திருப்பணி நடைபெற உள்ளதால், நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள,மூலவர் மற்றும் பல்லி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி, உற்சவர் வரதர் சிலையில் கால் பாதம், கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனால், கடந்த மாதம் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆடி கருடன் உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதனால், சேதமான சிலையை சீரமைப்பு பணி செய்ய முடிவு செய்ய ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள், வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகள் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால், இரு நாட்களும் மூலவர் மற்றும் பல்லி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இருநாட்களும் மூலவர் மற்றும் பல்லி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற சன்னிதிகளில் வழக்கம்போல தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !