ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா
ADDED :31 minutes ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சிநேகவல்லி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார். நான்கு தெருக்களிலும் பெண்கள் கோலமிட்டு அம்மனை வணங்கினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.