உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை தர்ப்பணம்

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை தர்ப்பணம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு , காவிரியில் தண்ணீர் இல்லாததால் நகராட்சி சார்பில் போர்வெல் ஷவர் வாட்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மயிலாடுதுறை நகரில் காசிக்கு இணையாக கருதப்படும் காவேரி துலா கட்டம் அமைந்துள்ளது. 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள இப்பகுதியில் புனித நீராடுவது சிறப்பம்சமாகும். இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து காவிரி கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும்  காவிரியில் தண்ணீர் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.  நகராட்சி சார்பில் ஆற்றின் உள்ளே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த போர்வெல் ஷவரில் நீராடி தர்ப்பணம் செய்த பொருட்களை அங்கு தேங்கி இருந்த தண்ணீரில் கரைத்து பக்தர்கள் வணங்கி சென்றனர். காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !