உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; மெகா விருந்துக்கு இன்று முதல் பொருட்கள் வழங்கலாம்

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; மெகா விருந்துக்கு இன்று முதல் பொருட்கள் வழங்கலாம்

 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு மெகா விருந்து அளிக்கப்படுகிறது.


இதுகுறித்து பொருளாளர் ஹரி மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது: டிரஸ்ட் சார்பில் சேதுபதி பள்ளியில் மீனாட்சி திருக்கல்யாண விருந்து நடத்தி வருகிறோம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 காலை 7:00 மணி முதல் இடைவெளி இல்லாமல் மதியம் வரை இனிப்பு, வெண் பொங்கல், வெஜிடபிள், தக்காளி, தயிர் சாதம், உருளைக்கிழங்கு, காரக்கறி, வடை வழங்கப்படுகிறது.


விருந்துக்கு தேவையான அரிசி, பருப்பு, ஆயில், நெய் போன்றவற்றை பக்தர்கள் கொடுத்து வருகின்றனர். காய்கறிகளை பரவை மார்க்கெட், மாட்டுத் தாவணி மார்க்கெட் வியாபாரிகள் கொடுக்கின்றனர். காஸ் சிலிண்டர்களை காஸ் ஏஜென்சி வியாபாரிகள் சங்கம் தருகின்றனர். அறுசுவை விருந்துக்கு தேவையான பொருட்களை இன்று (செப்.,14) முதல் செப்.,16 வரை விருப்பமுள்ளவர்கள் சேதுபதி பள்ளியில் வழங்கலாம். உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெற்று இவ்விருந்து நடத்தப் பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !