ஏடு கொடுக்கும் திருவிழா!
ADDED :4584 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி 8ம் நாள் திருவிழாவாக, நடராஜர், சிவகாமிக்கு "ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 17ல் துவங்கியது. நேற்று விடையாத்தி சப்பரத்தில் நடராஜர், மற்றொருவிடையாத்தி சப்பரத்தில் சிவகாமி அம்பாள் புறப்பாடாகி, வீதி உலா முடிந்து, கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை, சிவாச்சாரியார் பெற்று, சிவகாமி அம்மாளிடம் சேர்ப்பித்தார்.திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 29ல் நடக்கிறது. அதற்குமுன் நிகழ்ச்சியாக நாளை(மார்ச் 27) சூரசம்ஹாரம், மார்ச் 28ல் பட்டாபிஷேகம், மார்ச் 30ல் தேரோட்டம், மார்ச் 31ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.