மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4505 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4505 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4505 days ago
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் 13ம் ஆண்டு ஸம்வஸ்த்ரா அபிஷேகம் மற்றும் 4ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் சிறப்பு அபிஷேகத்துடன், செல்லியம்மன் பூங்கரக ஊர்வலம், இரவு சாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவிலில் கலச பூஜை, சிறப்பு அர்ச்சனை செய்தனர். பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 9 : 00 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெரு மாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதியுலா நடந்தது. இதில் விழா குழுவைச் சேர்ந்த மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், பூபதி, கணேசன், நாராயணசாமி, கார்த்தி, ரமேஷ், ஆனந்த், செந்தில் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். வரும் 10ம் தேதி திருவிளக்கு பூஜையும், 12ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
4505 days ago
4505 days ago
4505 days ago