உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் மீனாட்சி கோயிலில் 5 ஸ்கேனர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் மீனாட்சி கோயிலில் 5 ஸ்கேனர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது.  இதனால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, 5 கோபுரங்களிலும், பக்தர்களின் பொருட்களை ஸ்கேன்  செய்யும் கருவிகளை அமைக்க போலீசார் பரிந்துரைத்தனர். இதைஏற்று, கோயில்  நிர்வாகம் ரூ.86 லட்சத்தில்,  5 ஸ்கேனர்களை வாங்கியுள்ளது.  பொருட்கள் வைப்பறையில் இவை  வைக்கப்படவுள்ளன. பெரிய பொருட்கள் என்றால், ஸ்கேன் செய்து அந்த  அறையிலேயே பாதுகாக்கப்படும். சிறிய பொருட்கள் என்றால், பாலிதீன் கவரால் மூடப்பட்டு, போலீசாரால் "லாக் செய்யப்படும். ஒருவாரத்தில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !