தீபாவளியில் பக்தனுக்கு மரியாதை..!
ADDED :4366 days ago
குடந்தையில் லட்சுமிநாராயண சுவாமி என்னும் பக்தர் இருந்தார். பிரம்மச்சாரியான இவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி பலரும் வற்புறுத்தினர். ஆனால், சாரங்கபாணியின் தாசனாக இருக்கவே எனக்கு விருப்பம் என்று கூறி, விடாமுயற்சியோடு பக்தர்களின் துணைக்கொண்டு குடந்தை சாரங்கபாணி கோயிலின் 145 அடி உயர ராஜகோபுரத்தைக் கட்டி முடித்தார். இவர் ஒரு தீபாவளியன்று இரவு வைகுண்டபதவி அடைந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் இவருக்கு ஈமச்சடங்குகள் செய்துவிட்டு மறைந்துவிட்டாராம். பெருமாளே வந்ததாக உணர்ந்து அனைவரும் வியந்தனர். அன்று முதல் தீபாவளியன்று சிரார்த்த சமையல் செய்து மூலவர் சன்னதியில் படைக்கப்பட்டு, பின் இரண்டு அந்தணர்களுக்கு அதை போஜனமாக அளிக்கின்றனர். இவ்வாறு சிரார்த்த உணவு படைப்பது குடந்தை சாரங்கபாணி கோயிலில் மட்டும்தான்!