உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

வேலூர் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. ஜலகண்டேஸ்வரர் கோவில்: வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் சண்முகருக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.சூரசம்ஹாரம் 8–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

பாலமுருகன் கோவில்: வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிவில் கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி வருகிற 8–ந் தேதி வரை தினமும் காலை 9–30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

பழனி ஆண்டவர் கோவில்: வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் 33–ம் ஆண்டு கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும் பழனி ஆண்டவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 8–ந் தேதி இரவு தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !