கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தாரகாசூரன் வதம்
ADDED :4350 days ago
கந்தசஷ்டி திருவிழா கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் இம்மாதம் 3-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கழுகாசலமூர்த்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் முருகன் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.