உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வளம் வேண்டி யாகம்!

மழை வளம் வேண்டி யாகம்!

தூத்துக்குடி: அய்யனடைப்பில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மழை வளம் வேண்டி செவ்வாய்க்கிழமை பைரவர் யாகம் நடைபெற்றது. தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமான 11 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சுவாமிகளின் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பைரவ அஷ்டமியை முன்னிட்டு, தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் நல்லமழை பொழிந்து வளம் பெறவேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோயின்றி நலமாக வாழவேண்டியும் பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு பைரவர் யாகம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !