மிகப்பெரிய துவஜஸ்தம்பம்!
ADDED :4438 days ago
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள துவஜஸ்தம்பம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய துவஜஸ்தம்பங்களில் ஒன்றாகும். ஒரே கல்லினால் ஆன இந்த துவஜஸ்தம்பத்தின் உயரம் தரைக்கு மேல் சுமார் 80 அடியும், பூமிக்கடியில் சுமார் 40 அடியும் உள்ளதாக அமைந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் சுமார் 8 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.