உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை: 16 நாட்களில், ரூ.45.64 லட்சம்!

திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை: 16 நாட்களில், ரூ.45.64 லட்சம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், கடந்த, 16 நாட்களில், 45.64 லட்சம் ரூபாய், 358 கிராம் தங்கம் மற்றும் ெவள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில், பணம், தங்கம் மற்றும் ெவள்ளி பொருட்களை காணிக்கையாக அளிக்கின்றனர்.இம்மாதம்,10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை, நேற்று, மலைக் கோவிலில் உள்ள, வள்ளி மண்டபத்தில் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில், 120க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களால் பணம், நகை மற்றும் ெவள்ளி பொருட்கள் தனித்தனியாக பிரித்து கணக்கிடப்பட்டன. இதில், 45,64,293 ரூபாய் ரொக்கம், 358 கிராம் தங்கம் மற்றும் மூன்று கிலோ ெவள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். 16 நாட்களில் கோவிலுக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !