உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லைகாளி அம்மனுக்கு அர்த்த ஜாம மகா அபிஷேகம்!

தில்லைகாளி அம்மனுக்கு அர்த்த ஜாம மகா அபிஷேகம்!

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைகாளி அம்மன் கோவிலில் மார்கழி அமாவாசை அர்த்த ஜாம மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 13ம் ஆண்டு 151வது அர்த்த ஜாம சிறப்பு பூஜை மற்றும் மகா அபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அமாவாசை அர்த்த ஜாம பூஜையையொட்டி விநாயகர், பிரம்சாமுண்டி சன்னதியில் நெய் தீப ஆராதனை வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து தில்லை காளியம்மனுக்கு அர்த்த ஜாமத்தில் குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலகாப்பு, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் குங்கும காப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் வஸ்திரங்கள் வழங்கி அம்மனுக்கு வெண்பட்டு சாற்றப்பட்டு வெட்டிவேர் மற்றும் விலாமுச்சு வேர் மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி அர்த்த ஜாம மகா அபிஷேகத்தில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !